உங்கள் மீது இலங்கை ரசிகர்கள் கற்களை வீசலாம்! வங்கதேச கேப்டன் மீது ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் காட்டம்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் Timed-out மூலம் ஆட்டமிழந்ததால் அவரது சகோதரர் டிரெவின் மேத்யூஸ் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், ‘ ஷகிப் அல் ஹசனுக்கு இலங்கையில் இலங்கையில் நல்ல வரவேற்பு இல்லை. அவர் இங்கு எதாவது சர்வதேச அல்லது LPL போட்டிகளில் விளையாடினால், அவர் மீது கற்கள் வீசப்படலாம் அல்லது ரசிகர்களின் எரிச்சலை எதிர்கொள்ள நேரிடலாம் ‘ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ ஷகிப் அல் ஹசனிடம் Sportsmanship இல்லை. கிரிக்கெட் போன்ற ஜென்டில்மேன் விளையாட்டில் அவர் மனிதாபிமானத்தை காட்டவில்லை ‘ என கடுமையாக சாடியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!