ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம்: செஹான் சேமசிங்க!

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை அத்தோடு அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக பேசப்படும்.

பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வருவதோடு தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!