இலங்கையில் புத்தாண்டு எதிரொலியாக மதுபான சாலைகள் மூடல்!

Empty pub, closed sign, focus on foreground with blurred background

இலங்கையில் எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுபானசாலைகளை மூன்று நாட்களுக்கு மூடுவது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!