மாற்றத்திற்கான நகர்வுகளில் இலங்கை ..

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தியதலாவை இராணுவக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.

அமைதியை ஏற்படுத்தல், காலநிலை மாற்றம், மற்றும் பல்வேறு உலகளாவிய தாக்கங்கள், இலங்கையின் சர்வதேச உறவுகளின் மூலோபாயத்தின் மையத் தூண்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தருவது அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழு பணிகளில் இலங்கை இராணுவத்தினர் இணைந்தால், அது இலங்கை இராணுவத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!