ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கி செல்கிறது. தொடர்ந்து தவறான நிர்வாகம், பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பதற்கு பதிலாக கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதிலும், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க் தலைமையிலான அரசு கவனமாக இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.