இலங்கை கிரிக்கெட் – மனு இன்று விசாரணைக்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமை தொடர்பான மனு இன்றையதினம்  பரிசீலிக்கப்படவுள்ளது.
கடந்த 16ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மனுவை விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், மனு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்றையதினம் வரை மேலதிக நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய அதன் நடவடிக்கையை தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீடிக்காமல் இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
ஆரம்பத்தில் இந்த மனு விசாரணை குழுவில் இருந்து  நீதிபதிகள் மூவர் விலகிய நிலையில், கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, குறித்த மனு நீதிபதிகளான சோபித ராஜகருண மற்றும் டி. என். சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!