வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20யில் இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று சில்ஹெட்டில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது.
சதீர சமரவிக்ரமா 61 ரன்களும், குசால் மெண்டிஸ் 59 ரன்களும், கேப்டன் அசலங்கா 44 ரன்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, சவுமியா சர்கார் 12 ரன்னில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து மேத்யூஸ் ஓவரில் ஹிரிடோய் 8 ரன்னிலும், கேப்டன் ஷாண்டோ 20 ரன்னில் பத்திரனா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் மஹ்மத்துல்லா – ஜாகெர் அலி கூட்டணி இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
மஹ்மத்துல்லா 31 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜாகெர் அலி அரைசதம் அடித்தார்.
கடைசி ஓவரை ஷானகா துல்லியமாக வீச, வங்கதேச அணி 203 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
அதிரடியில் மிரட்டிய ஜாகெர் அலி 34 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.