கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.

நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி இரண்டு நாட்களிலும் சிறைச்சாலைகளுக்கு கைதிகளை பார்வையிட, அதிகளவானோர் வரக்கூடும் என்பதால், அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும், சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கைதிகளுக்குத் தேவையான உணவை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர முடியும். அத்துடன் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவையும் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!