மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க நடிகர் விஜய் யார்?

மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க நடிகர் விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது என பாஜக நிர்வாகி சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார். பெண் குழந்தைகள் வளர்ந்துவிட்டால் தந்தை கூட தயங்கியே நிற்பார், அப்படியிருக்க விஜய் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் எல்லா மாணவ, மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து விஜய் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

அது போல் ஒரு மாணவி மீது கை போட்ட போது அந்த மாணவி ஏதோ சொல்ல விஜய்க்கு அது புரியவில்லை. அப்போது அந்த மாணவியே விஜய்யின் கையை தோளின் மீதிருந்து எடுத்துவிட்டு கைகளை கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த நிகழ்வை விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும் விஜய்யும் அதை ஃப்ரீயாகவிட்டு விட்டு அதே புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இந்த தோளில் கை போட்ட சம்பவமும் அந்த மாணவி எடுத்துவிட்டதும் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகி சவுதாமணி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

மாணவியிடம் பாடம் கற்றுக் கொண்ட நடிகர் விஜய். மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை? ஆட்டிப்படைக்கும் விளம்பர மோகம்! அப்பட்டமான விதிமீறல்! பெண் குழந்தைகள் வளர்ந்து விட்டால் தந்தை கூட தயங்கியே நிற்பார்? யார் இவர்? இவ்வாறு சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!