71 வயது தாயை கட்டையால் அடித்துக்கொன்ற மகன்!

தமிழக மாவட்டம் மதுரையில் மது வாங்க பணம் தராததால், 71 வயது தாயை அவரது மகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகேயுள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் காசம்மாள் (71). இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

2022ஆம் ஆண்டில் வெளியான விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தில் காசம்மாள் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரது மகன் நமகோடி மதுவுக்கு அடிமையானவர் ஆவர் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் இணைந்து வசித்து வந்துள்ளார்.

ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நம்கோடி, தூங்கிக்கொண்டிருந்த காசம்மாளை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நமகோடி, கட்டை ஒன்றை எடுத்து காசம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காசம்மாளின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தலைமறைவான நமகோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!