2024 ஆம் ஆண்டு பற்றிய கணிப்புக்களில் சில திடுக்கிடும் தகவல்

இறைவனால் படைக்கப்படதாக கூறப்படும் இந்த உலகில் நடந்து முடிந்தவற்றை நாம் நிகழ்காலத்தில் கேட்கின்றோம். ஆனால் இனி நடக்கப்போகும் விடயங்களை சிலர் தங்களது கெட்டித்தனத்தால் கணித்து சொல்வார்கள்.

இவ்வாறு இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்ற நாம் அறிந்திருக்கிறோம்.

அதில் பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள். இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன

இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை அறிந்து நாம் மிகுந்த அச்சத்தோடு அப்படி நடந்துவிடுமோ என்று கடப்பதே வழமையாக இருக்கிறது.

இப்படியிருக்க இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமியும் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள்

ஆனால் அதோஸ் சலோமி இன்னும் இறக்கவில்லை நம்மிடையே வாழ்ந்துகொண்டு அடுத்து என்ன நிகழப்போகிறது என்று சொல்லுகிறார் அதோஸ் சலோமியின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் எப்படியிருக்கிறது என பார்ப்போம்.

மூன்றாம் உலகப்போர் 2024 ஆம் ஆண்டில் தென் சீனக் கடலில் எதிர்பாராத அளவில் பெரிய பதற்றம் ஏற்படலாம் அல்லது ஒரு பெரிய சைபர் தாக்குதல் கூட தூண்டப்படலாம் என்று அதோஸ் சலோமி கணித்துள்ளார்.

இந்த பதற்றத்தால் உலகளாவிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த ஆண்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே மோதல்கள் ஏற்பட்டு, மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Related posts

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 நினைவேந்தல்!