பிக் பாஸ் போட்டியாளர் கக்கிய சில உண்மைகள்! இந்த சீசன்ல இப்படி பண்ணிட்டாங்களே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா எவிக்ட் ஆன நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ந்சி தற்போது 96 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 96 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ள நிலையில் இன்று விசித்ரா வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸிலிருந்து வெளியேறிய விசித்ராவிற்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது 97 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 97 நாட்களுக்கு 29 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளாராம். பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கிய நபர் இவரே. மேலும் இதுவரை நடந்து முடிந்த சீசன்களை விட தற்போதைய சீசனில் வயது அதிகமான போட்டியாளராக கடைசி வரை வந்தவர் விசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!