இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மேற்கண்ட முடிவைத் தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும்.
எதிர்வரும் ஆண்டில் பல டிஜிட்டல் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் விசேட பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. – என்றார்.