அதிவேகத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் சகோதரிகள் பலி

சென்னையில் பெண்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மாணவர்கள் மோதியதில் பலியாகினர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சகோதரிகள் பவானி (38), சுபா (37).

இவர்கள் இருவரும் தங்கள் உறவினர் வீட்டிற்கு செல்ல காசிமேட்டிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக இருசக்கர வாகனம் மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சுபா சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியானார்.

ஆனால், உயிருக்கு போரடிக் கொண்டிருந்த பவானி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.

மேலும் விபத்திற்கு காரணமான கல்லூரி மாணவர்கள் பரத், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!