செவ்வாய் பெயர்ச்சியால் அனுகூலத்தை பெறப்போகும் ராசிகள்

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி ஆவார்.

45 நாட்களுக்கு ஒருமுறை மாறக்கூடிய செவ்வாய், பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைய உள்ளார்.

இதன்மூலம் சில ராசிகள் நல்ல நிதி ஆதாயம் பெறுவர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

செவ்வாய் இந்த ராசியின் 10வது வீட்டில் நுழைய உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

இவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். சொந்தமாக தொழில் செய்து வந்தால், இந்த பெயிற்சிக்கு பின் சாதகமாக இருக்கும்.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் செவ்வாயின் இடப்பெயர்ச்சியால் எதிர்பாராத பண வரவை பெறுவார்கள்.

வணிகர்கள் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணத்தை இந்த காலத்தில் பெறுவார்கள்.

திருமணமானவர்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறும் வாய்ப்புகள் உள்ளது. புதிய சொத்துக்களை வாங்க அல்லது விற்க வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

செவ்வாயின் பெயர்வால் விருச்சிக ராசிக்கு தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் முடிக்க முடியாத வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதால், நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

 

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024