சுற்றுலா பயணிகளால் நிரம்பியுள்ள சிகிரியா..

நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய பொருளாதார பிரச்சினை காரணமாக சுற்றுலா துறை பாரிய பின்னடைவை சந்தித்த போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் ஆண்டின் இறுதிவார விடுமுறைகள் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளதுடன் குறிப்பாக சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்டம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரையான காலப் பகுதியில் 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவற்றுள் அதிகளவானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சிகிரியாவை யார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 30 அமெரிக்க டொலர் பயணச்சீட்டுகளின் ஊடாக 225,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!