கிரிக்கெட் வீரரும், சானியா மிர்சாவின் முன்னாள் கணவருமான சோயப் மாலிக் 2வது திருமணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சோயிப் மாலிக் 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 124 டி20 போட்டிகளிலும் விளையாடியவர். 41 வயதாகும் இவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, 2010ஆம் ஆண்டு சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தான் வீரர் இந்திய வீராங்கனையை திருமணம் செய்துகொண்டது பேசுபொருளானது. இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரியப் போவதாக தகவல் வெளியாகின. எனினும் துபாயில் கடந்த ஆண்டு தங்கள் மகனின் பிறந்தநாளை சானியாவும், மாலிக்கும் ஒன்றாக கொண்டாடினர்.

எனினும், சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் Bioவில் Husband to a Super Woman Sania Mirza என்ற வாசகத்தை நீக்கினார்.

அதேபோல் சானியாவும் எந்த பதிவும் போடாமல் இருந்தார். இதனால் இவர்கள் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டாலும், விவாகரத்து செய்துவிட்டனரா என தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா ஜாவத்தை கராச்சியில் திருமணம் செய்துள்ளார் சோயிப் மாலிக்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் மாலிக் பகிர்ந்துள்ளார்.

சனா ஜாவத் பாடகர் உமைர் ஜஸ்வலை திருமணம் செய்திருந்தார். ஆனால் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை பிரிந்தார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!