சற்றுமுன் இலங்கை வந்தது சாந்தன் உடல்

தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈழத்தமிழரான அவரின் உடலை, இலங்கைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் கொழும்புவில் உள்ள காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

விமானநிலையத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!