சாந்தனின் சகோதரர் உருக்கமான கோரிக்கை!

சாந்தனின் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் 2 நாட்களுக்கு பின் வரும்படி சாந்தனின் சகோதரர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர், “இந்த ஒன்றரை வருடமாக போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை. அச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகிறது.

அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கிறேன். யாரையும் சந்திக்கவில்லை யாருடனும் பேசவில்லை எனவும் கோபிக்க வேண்டாம். நேரில் வர விரும்புபவர்களும் 2 நாட்களின் பின்னர் வர முடியுமா? என் தாயின் நிலை இனிமேலாவது எந்த தாய்க்கும் வராமலிருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் மரண தண்டனையில் இருந்து தப்பி,கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர், விரைவில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!