பிணவறையில் சாந்தன் உடல்? சர்ச்சையில் சிக்கிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், நளினி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பிணவறையில் சாந்தன் உடல் இருந்தபோது, சீமான் அங்கிருந்த இளைஞர்கள் சிலருக்கு செல்பியில் போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சிரித்தபடி போஸ் கொடுத்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தன் உடல் பின்னால் பிணவறையில் இருக்க, சீமான் சிரித்துக் கொண்டே செல்பிக்கு போஸ் கொடுக்கிறார் என நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!