தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தன் உடலுக்கு நளினி, சீமான் உள்ளிட்டோர் கண்கலங்கியபடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் சாந்தன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நளினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நளினி கண்கலங்கிய படி சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தேற்றினர்.
சாந்தனின் வழக்கறிஞர் கூறுகையில், “சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று அல்லது நாளை அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.