சாந்தன் மரணம்! பிரித்தானியாவில் இருந்து வந்த உறவுகள்

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரித்தானியாவில் இருந்து உறவினர்கள் வந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது குறித்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பேசிய அவர், “32 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாந்தனை விடுதலை செய்கிறோம் என்று கூறிவிட்டு, சிறப்பு முகாமில் ஓர் ஆண்டுகாலம் தங்க வைத்தனர்.

3 மாதங்களுக்கு முன்புகூட, சாந்தன் இந்தியாவில் தன் மீது எந்த வழக்கும் இல்லை, தன்னை தாய் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், அதற்குள் இப்படி நடந்துவிட்டது. சாந்தன் மரண செய்தியை அறிந்து பிரித்தானியாவில் இருந்து முருகனின் உறவினர்கள் வந்துள்ளனர்” என தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!