காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார் செல்வபெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை சற்று முன் பதவியேற்றார்.

பதவி முடிந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வந்தார். இதனால்,உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர்.

இதனால், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோர்தான் புதிய தலைவராக நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் செல்வப்பெருந்தையை தலைவராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதையடுத்து இன்று அவர் தலைவராக பதவியேற்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!