சீமானை கோபப்படுத்திய நபர் வைரலாகும் வீடியோ!

பிரச்சாரத்தில் சீமான் பாடிக்கொண்டிருக்கும் போதே இளைஞர் செய்த சம்பவத்தால் கோவமாக சீமான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.

இந்நிலையில், கட்சி பறிபோன பின்னரும் நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்தை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகளுக்கு போட்டியிடாமல் தடை விதிக்க வேண்டும். தற்போது ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறியவர் அண்ணாமலை” என்று பேசினார்.

மேலும், வித்யா வீரப்பனை பாட்டு பாடி ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றார்.

இதனால் கோபம் அடைந்த சீமான் முட்டாபய, கிறுக்குபய, அவன் பிரச்சனை அவனுக்கு, போட்டோ எடுக்க பார்க்குறான் என்று கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!