மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து!

கேகாலை வரகாபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி விபத்தில் காயமடைந்த 13 பேர் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!