லங்கா சதொசவில் நடந்த மோசடி..

லங்கா சதொசவில் சீனி அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு குறைந்த விலையில் சீனி வழங்குவதாக கூறி சுமார் இரண்டு வாரங்களாக ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 290 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரச நிறுவனமான சதொச சாதாரண சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!