போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்!

கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரை இன்று ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். கோவை போலீசார் இவரை விசாரணை செய்ய உள்ளனர்.

நேற்று வரை நீதிமன்ற காவலில் உள்ள அவர் இன்று ஒருநாள் போலீசார் மூலம் விசாரணை செய்யப்படுவார். இதற்கான வழக்கு விசாரணையின் போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாக சவுக்கு சங்கர் தரப்பு நேற்று கோர்ட்டில் கூறியது .

இதையடுத்து போலீஸ் காவல் விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை வழக்கறிஞரை சவுக்கு சங்கர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதாவது போலீஸ் காவல் விசாரணையின் போது 3 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஒரு சில நிமிடங்கள் மட்டும் சவுக்கு சங்கரை அவரின் வழக்கறிஞர் சந்திக்க முடியும். மற்ற நேரங்களில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்யலாம்.

குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் நேற்று மருத்துவம் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முழக்கம் போட்டார்.

மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.

ஏற்கனவே யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் பதியப்பட்டு உள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!