துபாயில் வேலைக்காக சென்ற 4 இலங்கை பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது, பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கிறது.
கொழும்புவின் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் குறித்த 4 பெண்கள் துபாயில் உள்ள ரியாத்திற்கு வீட்டு பணி வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அங்கு சரியான உணவு இல்லாமல் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.
தங்களைப் போன்று இங்கு பல பெண்கள் இருப்பதாகவும், இங்கிருக்கும் பெண் ஒருவரின் தொலைப்பேசி மூலம் இந்த வீடியோவை ரகசியமாக எடுத்து வெளியிடுகிறோம்.
எனவே, இலங்கை அரசு எங்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.