SA20 தொடர்: 52 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் முதலில் ஆடியது.

சன்ரைசர்ஸ் அணியின் Baartman மற்றும் Worrall தங்கள் புயல்வேக பந்துவீச்சில், பிரிட்டோரியா அணியின் விக்கெட்டுகளை மொத்தமாக சரித்தனர்.

தொடக்க வீரர்களான சால்ட் (10) மற்றும் வில் ஜேக்ஸ் (12) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர்.

13.3 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பிரிட்டோரியா அணி 52 ரன்களுக்கு சுருண்டது. Baartman 4 விக்கெட்டுகளும்,Worrall 3 விக்கெட்டுகளும், ஜென்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 6.5 ஓவரில் 54 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் அபெல் 31 (22) ரன்களும், ஹெர்மன் 20 (17) ரன்களும் எடுத்தனர்.

இதுவரை புள்ளிப்பட்டியலில் பிரிட்டோரியா அணி கடைசி இடத்திலும், சன்ரைஸர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!