மீண்டும் கலமிரங்கியுள்ள ரஷ்யா!..

யுக்ரேன் ரஷ்ய போரில் ரஷ்யா மீண்டும் பாரிய தாக்குலை ஆரம்பித்துள்ள நிலையில், 12 பேர் இன்றைய தினம் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலின் போது 158 ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யுக்ரேனிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஆயுத களஞ்சியத்தில் உள்ள சகல விதமான ஆயுதங்களையும் பிரயோகித்து வீடுகள், மகப்பேறு வைத்தியசாலைகள் உட்பட பல இலக்குகளை இன்று காலை ரஷ்யா தாக்கியுள்ளதாக யுக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யுக்ரேனின் தலைநகர் கீவி உட்பட மேற்குஇ தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!