கோபத்தில் கையில் பந்தை தூக்கி உதைத்த ரொனால்டோ!

அல் ஹிலால் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அல் நஸர் அணி படுதோல்வியடைந்தது.

Kingdom Arena மைதானத்தில் நடந்த நட்புமுறைப் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அல் ஹிலால் அணி 2 கோல்கள் அடித்து அதிர்ச்சி கொடுத்தது.

அல் நஸர் வீரர்கள் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

முதல் பாதியின் முடிவில், ரொனால்டோவிடம் பந்து வந்தபோது களநடுவர் விசில் ஊதி 45 நிமிடங்கள் முடிந்துவிட்டதாக கூறினார்.

இதனால் கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, பந்தை கையில் எடுத்து வெளியே தூக்கி உதைத்தார்.

இதன் காரணமாக அவருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. இரண்டாம் பாதியில் ரொனால்டோவின் கோல் முயற்சிகள் வீணாகின.

அத்துடன் சக அணி வீரர்களும் சொதப்பியதால் அவர் விரக்தியுடனே காணப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பெண் நடுவரை வீட்டுக்கு அனுப்புங்கள் என ரொனால்டோ காட்டமாக சைகை மூலம் கூறினார்.

தற்போது ரொனால்டோ கோபப்பட்ட தருணங்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!