ரோகித் சர்மா இனி இல்லை.. இனி இவர்தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 17வது சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக துபாயில் நடந்த மினி ஏலத்தில் குஜராத் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கடைசி நேரத்தில் மும்பை அணி வாங்கியது.
தன்னுடைய அணியில் விளையாடி இருந்தாலும் வேறு ஒரு அணியில் கேப்டனாக இருந்து, அந்த அணிக்காக கோப்பை வென்று கொடுத்தவரை மும்பை அணி வாங்கிப் போட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து, தற்போது 5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து அந்த அணி நிர்வாகம் விலக்கியுள்ளது.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய தொடக்கம். வாழ்த்துக்கள், கேப்டன் பாண்டியா” என்று தெரிவித்துள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் வெளியிட்டுள்ள நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ரோகித் இருக்கும்போதே வேறு கேப்டனா, ரோகித் ஓரம்கட்டப்படுகிறாரா என்ற கேள்விகள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!