வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவி!

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளப் பேரிடரால் அதிகூடிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள 275 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்றையதினம்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கப்பட்டுள்ளன.
கனடாவில் வசிக்கும் சமூக ஆர்வலரான, New Spiceland Supermarket நிறுவன உரிமையாளர் சுரேஸ் மகேந்திரன் நிதியுதவியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
பன்னங்கண்டியைச் சேர்ந்த 150 குடும்பங்கள், கந்தபுரம் ஐயனார் குடியிருப்பில் வசிக்கும் 50 குடும்பங்கள் மற்றும் விநாயகர் குடியிருப்பில் வசிக்கும் 75 குடும்பங்கள் உள்ளிட்ட 275 குடும்பங்களுக்கு இந்த முதற்கட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!