வீடுகளுக்குள் புகுந்து வீடியோக்கள் பதிவு! – சந்தேக நபர் கைது

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இடம்பெற்றது.
கைதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது
குறித்த நபருக்கு எதிராக அண்மையில் பெண்கள் சிலர் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைக்கு அமைய அகுறித்த சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!