வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் வாக்களித்த ராசாத்தி கருணாநிதி ஒருமுறை வாக்களிக்க வேண்டுமா அல்லது இரண்டு முறை வாக்களிக்க வேண்டுமா என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியின் தாயாரான ராசாத்தி கருணாநிதி வாக்களித்தார். வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் சிறிது நேரம் காத்திருந்த அவர் பின்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி அதிகாரிகளை பார்த்து ‘ஒரு ஓட்டு தான் போட வேண்டுமா.. அல்லது இன்னொரு ஓட்டும் போட வேண்டுமா’ எனக் கேட்டார். அதற்கு அதிகாரிகள் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போட்டால் போதும் எனக் கூறியதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் .

நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் நிலையில் சென்னையிலும் அது போல நடக்கலாம் என்ற எண்ணத்தில் ராசாத்தி கருணாநிதி அப்படி கேட்டு இருக்கலாம் என அவருடன் வந்தவர்கள் கூறினர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!