வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர்!

விவாகரத்து குறித்து நடிகர் ரன்வீர் மனம் திறந்துள்ளார். பாலிவுட்டில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மும்பையில், ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்கும், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும், விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்றும் பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.

இதற்கிடையில் தீபிகா கர்ப்பமாக இருக்கிறார். மேலும், ரன்வீர் இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களையெல்லாம் நீக்கியுள்ளார். ஆனால், அவர் 2023 நிகழ்வுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரன்வீர் சிங் சமீபத்திய பேட்டியில், ”எங்கள் முதல் குழந்தையை வரவேற்க நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்.

என் வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷலான நகைகள் என்றால் திருமணத்தின் போது எனது மனைவி எனக்குக் கொடுத்த மோதிரம் தான்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பரவி வரும் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!