பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய படிக்கல் – மனிஷ்!

ரஞ்சிக்கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணி 514 ரன்கள் குவித்தது.

ரஞ்சிக்கோப்பை தொடரில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.

ஹூப்ளியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் கர்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்
பஞ்சாப் அணி தனது முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக நேஹல் வதேரா 44 ஓட்டங்கள் எடுத்தார். கர்நாடகா தரப்பில் வாசுகி கௌசிக் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனைத் தொடர்ந்து கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தேவ்தட் படிக்கல் மற்றும் மனிஷ் பாண்டே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

படிக்கல் அதிரடியாக சதம் விளாசினார். அவர் 216 பந்துகளை எதிர்கொண்ட படிக்கல் 4 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 193 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர் மனிஷ் பாண்டே 118 ரன்களும், ஸ்ரீனிவாஸ் 76 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 514 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கியுள்ள பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

பிரப்சிம்ரன் சிங் 100 ரன்களும், அபிஷேக் சர்மா 91 ரன்களும் விளாசினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!