மொட்டு கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பசில் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அதிபர் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஏனைய அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ரணிலுக்கும் மொட்டுக்கட்சி தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புகள் ஸ்ரீலங்கா அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!