நடிகை ரம்பாவிடம் அத்துமீறினாரா ரஜினி? இணையத்தில் வைரலான விடயம்

தமிழ்ப்பட நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் ரஜினி குறித்து பேசிய விடயம் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் அருணாச்சலம்.

1997ஆம் ஆண்டில் வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், அருணாச்சலம் படப்பிடிப்புப்பின் போது நடிகர்கள் சல்மான் கான், ஜாக்கி ஷெராப் ஆகியோர் வந்துள்ளனர்.

அவர்களை மரியாதை நிமிர்த்தமாக காட்டிப்பிடித்து ரம்பா வரவேற்றுள்ளார்.

அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் இதனை குறிப்பிட்டு ரம்பாவிடம் சங்கடப்பட்டுள்ளார்.

ஹிந்தி நடிகர்களை ஒரு மாதிரியும், தென்னிந்திய நடிகர்களை வேறு மாதிரியும் ரம்பா வரவேற்பதாக அவர் கூறினாராம்.

மேலும், திடீரென பவர்கட் ஆகி இருட்டானபோது யாரோ ஒருவர் ரம்பாவை தட்டியுள்ளார். பின்னர் தான் ரஜினி அவ்வாறு விளையாட்டாக செய்ததாக ரம்பா கூறினார்.

ஆனால், ரம்பாவிடம் நடிகர் ரஜினிகாந்த் அத்துமீறியதாக இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!