‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக கூறி ஆச்சரியப்படுத்தினர்.
அதில் நடிகர் தனுஷ் கதையில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசுகையில், “நடிகர் தனுஷ் எனக்காக இரண்டு கதைகள் வைத்திருந்தார். அதை என்னிடமும் கூறினார். ஆனால், சில காரணங்களால் அதில் நடிக்க முடியவில்லை. இதை தனுஷும் அழகாக புரிந்து கொண்டார்” என்று கூறினார்.
ஆனால், அந்த படத்தில் நடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை கூறவில்லை.