ராகு – சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு நிகழப்போகும் மாற்றங்கள்

மார்ச் மாதத்தில் சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பயணித்து வருவதால், இந்த சேர்க்கை 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ளது.

இதன்மூலம் மூன்று ராசிகள் திடீர் பணவரவு, முன்னேற்றங்களை காண்பார்கள்.

ரிஷபம்

ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ரிஷப ராசியின் 11வது வீட்டில் நிகழவுள்ளது.

இதனால் சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதுடன், உயர்வையும் அடையலாம்.

இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மிகவும் வலுவாக இருப்பதுடன், நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.

வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும் பாரிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களை தரும் வாய்ப்பு உள்ளது.

சில புதிய சொத்துக்களையும், வாகனங்களையும் வாங்க வாய்ப்புக்களை பெறலாம்.

மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை தேடி வரும்.

வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி நன்மைகளை பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதால், நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024