25 வயதுக்குள் அதிக உலக கோப்பை சதங்கள் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா.
சச்சின் டெண்டுல்கர் தன் 22 வயதில் 2 சதங்கள் அடித்திருந்த நிலையில், 23 வயதான ரச்சின் ரவீந்திரா இன்று பாகிஸ்தானுக்கு எதிராக தன் மூன்றாவது சதத்தை விளாசி உலக கோப்பையில் 25 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திரா நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3 சதங்களுடன் 523 ரன்கள் குவித்துள்ளார்.