காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதற்கான வேலைகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஈடுபட்டு வந்தார்.
அதிலும், குறிப்பாக தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தற்போது அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சனை என்பது இதுவரை வெளியாகவில்லை.
இது குறித்து அவர் தனது X தளத்தில், “உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.