இளவரசர் மைக்கேல் மருமகன் மரணம்!

மறைந்த பிரித்தானியா எலிசெபத் மகாராணியின் முதல் உறவினரான இளவரசர் மைக்கேலின் மகள் லேடி கேப்ரியல்லாவின் கணவர் தாமஸ் கிங்ஸ்டன் திடீரென்று உயிரிழந்திருப்பது அரச குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 25) குளோசெஸ்டர்ஷையரில் இறந்து கிடந்துள்ளார். இது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரின் மரணம் மொத்த அரச குடும்பத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த தாமஸ் கிங்ஸ்டனுக்கு ஜோனா கானோலி மற்றும் எம்மா முர்ரே என 2 சகோதரிகள் உள்ளனர். தந்தை மார்ட்டின் கிங்ஸ்டன் கே.சி, அவரது தாயார் ஜில் மேரி கிங்ஸ்டன் பெரும் துயரத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டன் மரணம் குறித்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா “மிகவும் இதயப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்திற்கு” என தெரிவித்துள்ளனர்.

இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!