நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி ! போக்குவரத்தில் மாற்றம்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதால், போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”நாளை(பிப்.27), மற்றும் நாளை மறுநாள்(பிப்.28) அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வருகை தருகிறார்.

இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதில், ஒரு சில முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள், மேலூர், திருவாதவூர் வழியாக பூவந்தி-திருப்புவனம்-முக்குளம்-காரியாபட்டி வழியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடையும்.

இதேபோல் திருச்சியில் இருந்து மதுரை வழியாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் செல்லும் வாகனங்கள்,மேலூர், அழகர் கோயில் சாலை வழியாக அப்பன் திருப்பதீ, கடசனேந்தல்-மதுரை மாநகர் மார்க்கமாக நாகமலை புதுக்கோட்டை பிரிவு வழியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடையும்.

தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல், தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து மதுரை, திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல்,இராஜபாளையத்தில் இருந்து மதுரை, தேனியில் இருந்து தூத்துக்குடி உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!