யாழ் குயிலை ஜனாதிபதி சந்திப்பு

யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது கில்மிஷாவை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார்.

கில்மிஷா ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை கில்மிஷாவை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் நேரில் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!