தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எம்பி கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும், தங்கள் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளன.
அதன்படி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரா, ” ஜனாதிபதி வேட்பாளாராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் அநுரகுமார திஸாநாயக்காவுக்கு பயங்கரமான கடந்த காலம் உண்டு. ஆனால்,கலாநிதி ஹரிணி அமரசூரியாவுக்கு அப்படி இல்லை. நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தினால் நல்லது” என தெரிவித்துள்ளார்.