நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன்: ரணில்!

நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார்.

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று (26), பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தி என்று தெரிவித்த அதிபர், சிலர் அதிபர் பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் தான் நாட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உரையை வரவேற்று நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது. பண்டாரகம, மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!