பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) இன்று காலமானார்.

தமிழில் ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரஜினி நடிப்பில் உருவான ‘நான் அடிமை இல்லை’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆனந்த். குறிப்பாக ‘நான் அடிமை இல்லை’ படத்தில் வரும் ‘ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்’ என்ற பாடல் தற்போது இருக்கும் இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் என மொத்தம் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, சமீபத்தில் உடல்நிலை மோசமானதால், சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு மொழிகளில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!