பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேற்றம்

பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வீட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் ஜோடியாக சுற்றித்திரிந்த பூர்ணிமா – மாயா இருவரில் பூர்ணிமா வெளியேறியது மாயாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்முறை வெற்றியாளர் யார் என மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!